Saturday, 21st September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம்: தமிழ்நாடு சோட்டக்கான் கராத்தே அகாடமியின் கலர் பெல்ட் பட்டய தேர்வு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சீராப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் பல்வேறு பகுதியிலிருந்து சுமார் 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக திமுக அயலக அணி துணை செயலாளர் மற்றும் முத்தாயம்மாள் கல்வி அறக்கட்டளை சேர்மன் முத்துவேல் ராமசாமி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் P.மலர் மணி, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் V.மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனர்.
மாணவ மாணவிகளுக்கு தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் V.சரவணன் மற்றும் பயிற்சியாளர்கள் P.கிருஷ்ணன், வெங்கடாசலம், மாணிக்கம், பிரபு ஆகியோர் பயிற்சி அளித்தனர்.